tamilnadu

img

தமிழர்கள் 5 - வடஇந்தியர்கள் 91 பேர் தேர்வு: தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப்போக்கு சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு

மதுரை,ஜூன் 14- தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே  தேர்வு செய்யப்பட்டிருப்பது தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப்போக்கின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் சனிக்கிழமையன்று வெளியாகி யுள்ளது. துறையில் பணியாற்றுகிற சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இத்தேர்வில், 96 பேர் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளனர், அதில் 5 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த வர்கள், மீதமுள்ள 91 பேரும்  வடஇந்தியர்கள். தேர்வு எழுதியவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப்போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.