துணைவேந்தர் தேடுதல் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு
ஆளுநரிடமிருந்த அதிகாரம் கைமாறியது
சென்னை, மே 2 - பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், ஆளுநரிடமி ருந்து தமிழ்நாடு அரசுக்கு வந்த பிறகு, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உள்ளது. சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் முந்தைய துணை வேந்தர் சந்தோஷ் குமாரின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சி தானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வாசுகி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தீன பந்து உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப் பட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்குத் தகுதியான பேராசிரியர்கள் இந்தத் தேடுதல் குழுவிடம் ஆறு வார காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். பெறப் பட்ட விண்ணப்பங்களை தேடுதல் குழு பரிசீலனை செய்து, தகுதியான நபர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும்.