தெரு நாய்கள் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு அறிவிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய்க்கடி சம்பவம் தொடர் பாகவும், நாய் கடித்து மரணம் அடை யும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண் ணன், பாஜக உறுப்பினர் வானதி சீனி வாசன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “சமீப காலங்களில் தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து மரணம் அடை யும் கால்நடைகளுக்கு பேரிடர் மேலாண்மை விதிகளின்படி உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி தெரு நாய்கள் கடித்து மரணம் அடைந்த 1,149 கால் நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக திங்களன்றே உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக் கிறது. வெறி நாய்கள் பிடித்து அவற் றிற்கு ஊசி செலுத்தி குணமடைந்த பின் மீண்டும் விட்டுவிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. வெறிநாய்களைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றால்தான் தீர்வு கிடைக்கும். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை முத லமைச்சர் அறிவித்துள்ளார்” என்று அவர் கூறினார்.
விவசாயிகள் சங்கம் வரவேற்பு
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதி கரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் விவசாயி களின் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கால்நடைகள் நாய்கள் கடித்து இறந்து வருகின்றன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரியும் 14.2.2024 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பத்திரி கைகளின் வாயிலாக தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தினோம். இந்நிலையில், புதனன்று சட்டப்பேர வையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37,500 ரூபாயும், வெள்ளாடு /செம்மறி ஆடு ஒன்றுக்கு 6000 ரூபா யும், கோழி ஒன்றுக்கு 200 ரூபாயும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் வரவேற் கிறோம். இதுவரை உயிரிழந்த கால்நடை களை முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.