tamilnadu

றுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 2 பேர் கைது

றுமியை கடத்தி பாலியல் தொழிலில்
ஈடுபடுத்திய வழக்கில் 2 பேர் கைது

சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி இரண்டு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 14 மற்றும் 13 வயதுடைய பள்ளி மாணவிகள் 2 பேரை கடந்த 2014-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39), இவரது மனைவி தமிழரசி (39) ஆகியோர் கடத்திச் சென்றனர். பின்னர் மாணவிகளை திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்திச் சென்று அங்குள்ள புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். அப்போது மாணவிகள் 2 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் மாணவிகளிடம் விசாரித்த போது, மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைய டுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதோடு, கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கிடையே முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார், தமிழரசி ஆகியோர் 2018-ம் ஆண்டு தலைமறைவாகினர். இருப்பினும் கடந்த 4.1.2019 அன்று இவ்வழக்கில் தொடர்புடைய 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு நடந்து கொண்டி ருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடு விக்கப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெபினா (40) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 7 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த சதீஷ்குமார், தமிழரசியை தேடி வந்த நிலையில் சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு சதீஷ்குமாரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திரு வண்ணாமலையில் வீட்டு வேலை செய்து அங்கேயே தங்கி இருந்த தமிழரசியையும் போலீசார் கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர். இந்த சம்பவம் கட லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனர். மாதர் சங்கம் போராட்டம்: திட்டக்குடியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி, குற்றவாளிகள் தப்பிக்க விடாமல் நடவடிக்கை எடுத்த துடன், வழக்கையும் முன்னின்று நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.