tamilnadu

31.50 லட்சம் தொழிலாளர்க்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் தொடங்கிய

31.50 லட்சம் தொழிலாளர்க்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் தொடங்கியது

சென்னை, பிப். 18 - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 18 அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள், வாகனப் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட 31.50 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் புதனன்று தொடங்கி வைத்தார்.  திமுக அரசு பொறுப்பேற்ற 2021 மே 7 முதல் 2026 ஜனவரி 31 வரை 37.75 லட்சம் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரத்து 317 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.