tamilnadu

ஆவின் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிட தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் கோரிக்கை

மதுரை, மே 20- கொரோனா ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழலில் ஆவின் ஊழியர்களுக்கு இல வசமாக உணவு வழங்கக்கோரி தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்க பொதுச்செயலாளர் இரா.லெனின், ஆவின் ஊழியர் சங்க சிஐடியு செயலாளர் பி.கே.செல்வராஜ், நிர்வாகி இ.மணி வேல் ஆகியோர் ஆவின் பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்கள்.  உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் சூழ் நிலையில் தமிழக அரசு அந்த நோய் தொற்றிலிருந்து மக் களை பாதுகாக்க பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் பொதுமக்க ளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லா மல் எவ்வித தடையுமின்றி ஆவின் நிர்வாகத்தின் மூலம் பால் வழங்கி வருவதும் மற்றும் ஆவி னில் பணியாற்றும் ஊழியர் களுக்கு உணவு வழங்கி வரு வதும் பாராட்டுக்குரிய விஷய மாகும். மதுரை ஆவின் நிறுவனம் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும், இச்சட்டத்தின்படி நிர்வாகமே ஆவின் ஊழியர்களுக்கு சிற் றுண்டியகம் நடத்த வேண்டும்.

அந்த வகையில் துரதிஷ்டவச மாக தற்போது மனமகிழ் மன் றம் என்கிற பெயரில் ஊழியர்களி டம் பணம் வசூல் செய்து கேண் டீன் நடத்துவது கண்டனத்துக்கு ரியதாகும் என்று பலமுறை நிர் வாகத்திற்கு எங்கள் சங்கத்தில் சார்பில் மனுக்கள் அளித்தும் தொழிற்சாலை ஆய்வாளர் அவர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரும் ஆவினில் ஆய்வு செய்து நிர்வா கத்திடம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி அதற்கு ஆவின் நிர்வாகமே நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்கிறோம் என எழுத்துப்பூர்வமாக பதில் வழங் கியதையும் தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் நினைவு படுத்த விரும்புகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தொடரும் என அரசு அறிவித்துள்ள சூழலில் ஆவின் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி விட்டு தற்போது திடீரென ஊழியர்களிடமும் தொழிற் சங்கத் தினரிடமும் எவ்வித ஆலோசனையும் மேற்கொள் ளாமல் மே 18ஆம் தேதி முதல் கேண்டீனில் உணவு வகை களுக்கு கட்டணம் வசூல் செய் யப்படும் என்று அறிவித்து அது வும் கொரோனா காலத்திற்கு முந் தைய காலத்து விலையைவிட கூடுதலாக விலை நிர்ணயம் செய்துள்ளது அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. எனவே ஆவின் ஊழியர் களுக்கு நிர்வாகமே இலவச உணவு வழங்குவதில் நிதிச் சுமை ஏற்பட வாய்ப்பில்லை. தொடர்ந்து லாபத்தில் இயங்கு கின்ற நிர்வாகம் மட்டுமல்லா மல் சூப்பர் டாக்ஸ் செலுத்து கின்ற நிறுவனம் ஆவின் நிர்வாக மாகும்.

எனவே கட்டணம் வசூ லிக்கும் உத்தரவை மறுபரி சீலனை செய்து கட்டணம் வசூ லிக்கும் உத்தரவை ரத்து செய்து கொரோனா நோய் தொற்று கார ணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட் டுள்ள நிலையில் தொடர்ந்து ஊழியர்களுக்கு கேண்டீனில் இலவசமாக உணவு வழங்கிட வேண்டுமென்று மதுரை ஆவின் பொது மேலாளரி டம் தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டது.