நவ.26 வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு
சென்னை, நவ.23 - தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 26 ஆம் தேதி புயல் உரு வாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதி யில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக வலுவடைந்துள்ளது. இது புயலாக உருமாற வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் உருவானால் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்த ‘சென்யார்’ என்ற பெயர் இப்புய லுக்கு வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்தமான் நிகோபர் கடல் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையின்போது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.