tamilnadu

img

பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை ஜன.28 வரை நீட்டிக்க வேண்டும்! தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பெ. சண்முகம் நேரில் வலியுறுத்தல்

பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை ஜன.28 வரை  நீட்டிக்க வேண்டும்! தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பெ. சண்முகம் நேரில் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 12 - வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற் கான கால அவகாசத்தை ஜனவரி 28  வரை நீட்டிக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திங்களன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த பெ. சண்முகம், “வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணி களை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம், 2026 ஜனவரி 18 வரை கால அவகாசம் அளித்துள்ளது. தமிழ கத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி யும், தொடர் விடுமுறையின் காரணமாக வும் பொதுமக்கள் தங்களது சொந்த  ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை 2026 ஜனவரி 28 வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். அத்துடன், 2026 ஜனவரி  24, 25 தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்துவதுடன், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்திய தாக தெரிவித்தார். தங்களின் இந்தக் கோரிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணை யத்திற்கு பரிந்துரைப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் உடனிருந்தார். ஆணையத்திடம் சிபிஎம் அளித்த குறிப்பு பக்கம் : 5