tamilnadu

எத்தனை ‘ஷா’ வந்தாலென்ன  எங்கள் படை காத்திருக்கும்! முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி

எத்தனை ‘ஷா’ வந்தாலென்ன  எங்கள் படை காத்திருக்கும்! முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி

சென்னை, டிச. 10 - “எத்தனை ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? தில்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப்  படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த தில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்  (Out of Control) தான் “ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் புதன்கிழமையன்று நடந்த வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டார். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரையை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை நிர்ணயித்துக் கொடுத்தார். திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்த குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.