tamilnadu

img

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசு டிச. 23 - தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்குவோம்!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசு டிச. 23 - தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்குவோம்!

இடதுசாரிக் கட்சிகள் - வி.சி.க. கூட்டறிக்கை  சென்னை, டிச. 17 - கிராமப்புற மக்களின் கண்ணிய மான வாழ்க்கை ஆதாரமாக விளங்கும், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழித்துக்கட்டும் வகையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதாவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 23  அன்று ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீர பாண்டியன், விசிக நிறுவனர் தொல்.  திருமாவளவன், சிபிஐ(எம்.எல்)  விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்ட றிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.  அதில், கூறப்பட்டிருப்பதாவது: இடதுசாரிகளால் உருவான வரலாற்றுச் சட்டம்! இருபது ஆண்டுகளுக்கு முன்பு  இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சி யால், தி.மு.க, காங்கிரஸ் கட்சி களை உள்ளடக்கிய ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியில் “தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புச் சட்டம் 2005” செப்டம்பர் 5 அன்று நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்று இருக்கும் ஊரகப் பகுதி தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, 2006 பிப்ரவரி 2 முதல் துவங்கி, நாடு முழுவதும் விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட தொடக்க விழாவில் பேசிய அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட் டாக இருக்காது என தெரிவித்தார். உலக நாடுகளின்  கவனத்தை ஈர்த்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முன்னோடி திட்டமாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூகச் சொத்துக் கள் நாடு முழுவதும் உருவாக்கப் பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது; தீவிரமாகி வந்த நகரமயமாகும் வேகம் தணிந்து வேலை தேடி கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து செல்வது குறைந்துள்ளது; பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என சமூகத்தின் பலவீனமான பகுதி யினர் வருமான வாய்ப்பு காரண மாக சுயமரியாதையுடன் கண்ணிய மான வாழ்க்கைச் சூழலைச் பெற்று  வருகின்றனர். நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்த தற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடிப்படை காரணமாகும்.   அடியோடு அழித்தொழிக்கும்  ஒன்றிய பாஜக அரசு கடந்த 2014ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, உரிய காலத்தில் நிதி  வழங்காமல் இழுத்தடிப்பது என  திட்டத்தையே அடியோடு அழித் தொழிக்கும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய  பாஜக அரசு மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புச் சட்டத்தை முற்றாக நீக்கி விட்டு, ‘வளர்ந்த பாரதம் - வேலைக் கான உறுதியளிப்பு மற்றும் ஊரக வாழ்வாதாரம் திட்டம்- 2025’ (விக்ஷித்  பாரத் - கேரண்டி பார் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் 2025) என்ற புதிய மசோதாவை 16.12.2025 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தையும் படுகொலை செய்த வகுப்புவாத சக்திகள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத- மக்கள் ஒற்றுமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக, மத வெறியூட்டி செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சக்திகள்- விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியை 1948 ஜனவரி 30-இல் படுகொலை செய்தன. தற்போது அவர் இறந்த பிறகும், பெயரையும் கூட சகிக்க முடியாமல் மகாத்மா காந்தியின் பெயரிலான திட்டத்தையும் படுகொலை செய்துள்ளது. புதிய ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டம் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமையை பறித்துவிட்டது. இந்தத் திட்டத்திற்கான செலவில் 40 சதவிகிதம் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துகிறது. இதனால் மாநில அரசுகள், கூடுதல் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. வேலை - இழப்பீடு உத்தரவாதம் பறிபோனது முந்தைய சட்டத்தில் வேலைகேட்டு முறையிட்டால் 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வேலை வழங்க முடியாத நிலையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதித்து வசூலிக்கவும் வகை  செய்யப்பட்டிருந்தது. புதிய திட்டத்தில்,  ஒன்றிய அரசின் இந்த பொறுப்புகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டு, கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதி காரங்களும் பறித்துக் கொள்ளப் பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் மூலம் வேலை அட்டை பெற்றுள்ள சுமார் 14 கோடி குடும்பங்களையும், அதில் இணைந்துள்ள 26 கோடி தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய ‘வி பி - ஜி  ராம் ஜி’ என்ற வகுப்புவாத சார்பு கொண்ட  வஞ்சகத் திட்டம் கொண்டுவரப்பட்டி ருப்பதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட - வட்ட - ஒன்றிய நகரங்களில் கண்டனம் முழக்குவோம் தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து, 23.12.2025 அன்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளன. இந்த முடிவின் படி இடதுசாரி கட்சிகள்  - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்புகள், ஒருங்கிணைந்து, ஊரகப் பகுதி உழைக்கும் மக்களை பெருமளவில் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த  வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.