அமெ. ஏகாதிபத்தியத்தின் யுத்தவெறி தாக்குதலை கண்டித்து மார்ச் 3 கண்டன ஆர்ப்பாட்டம்!
சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன், விசிக கூட்டாக அழைப்பு
சென்னை, மார்ச் 1 - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த வெறி தாக்குதலை கண்டித்து மார்ச் 3 அன்று தமிழகத்தின் 5 நக ரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டி யன், விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் ஞாயிறன்று கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல்கள் ஈரானின் தேசிய இறையாண்மை, ஐ.நா. சாசனம் மற்றும் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். ஈரானு டனான தற்போதைய பேச்சு வார்த்தையை புறக்கணித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடு களும் அமெரிக்காவை வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்க டிரம்ப் நிர்வாகம், இனவெறி இஸ்ரேல் அர சுடன் கூட்டுச் சதி செய்து சனிக் கிழமை (28.02.2026) அதிகாலை முதல் ஈரான் மீது கொடூரமான ராணுவத் தாக்குதலை தொடங்கி