tamilnadu

img

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் அணி திரளட்டும்!

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் அணி திரளட்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘மே தின’ வாழ்த்து!

சென்னை, ஏப். 30 - உலகம் முழுவதும் வியாழனன்று 136-ஆவது மே தினம் கொண்டாடப் படுவதையொட்டி, உழைக்கும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களைத் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

உரிமைக்காக ரத்தம் சிந்திய தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்

கருத்தாலும், கரத்தாலும் உழைக் கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ‘மே தின’ நல்வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம்  சிந்திய, உயிரை இழந்த தொழிலா ளர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரி வித்துக் கொள்கிறோம். தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்யப்பட்ட அடிப்படையில், அவர்கள் 8 மணி நேரம் வேலை செய் திருந்தாலும், உற்பத்தி உலக அள வில் பெருகியுள்ளது. உற்பத்தி பெருக் கத்திற்கு தொழிலாளர்களும், அவர்களது நவீன கண்டு பிடிப்பு களும் பேருதவி செய்துள்ளன. இதை முதலாளிகளும் முதலாளித்துவமும் மறுக்க முடியாது. இத்தகைய கண்டு பிடிப்பு களையும், உற்பத்தி பெருக்கத் தையும் தனது லாபத்திற்கும், மூல தன பெருக்கத்திற் கும் பயன் படுத்திக் கொண்ட முத லாளித்துவம், தொழிலாளர் களை மென் மேலும் சுரண்டு கிற வகையில், சட்டங்களைத் திருத்தி, உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது, உழைக்கும் பெண் களுக்கு குறைவான ஊதியம் வழங்கி கூடுதல் உழைப்பைச் சுரண்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

வேலைநேரத்தைக் குறைக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்

8 மணி நேர வேலை என்பதை, உற்பத்தி பெருக்கம் மற்றும் ‘செயற்கை நுண்ணறிவு’, ‘ரோபோ’ போன்ற நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக வேலை நேரத்தை குறைக்க ஒன்றிய பாஜக ஆட்சியை வலியுறுத்துவோம். அதே போல் ஒப்பந்தம், பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலுவான போரா ட்டங்களை முன்னெடுப்போம். எந்தவித சமூக பாதுகாப்பும் அற்ற அமைப்புசாரா தொழிலாளர் கள், தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கை களான, ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு உள்ளிட்ட வற்றை ஒன்றிய மற்றும் மாநில அர சுகள் மேற்கொள்வதை வலி யுறுத்திய போராட்டங்கள் தீவிர மாவதை உறுதி செய்வோம்.

மே 20 மறியலை வெற்றிகரமாக்குவோம்

ஒன்றிய பாஜக அரசு தொழி லாளர் சட்டங்களைத் திருத்தி, அதை அமலாக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், பாஜக ஆட்சியாளர்களின் முதலாளித்துவ கொள்ளை லாபத்திற்கு உதவிடும் சட்டத் திருத்தங்களை முறியடிப்பது மே தின சபதமாக அமையட்டும்.  அதற்காக மே 20  அன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம். ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு முன்  தொழிற்சங்கங்களும், இதர வெகு மக்கள் அமைப்புகளும் நடத்த  திட்டமிட்டுள்ள மறியல் போராட்டங் களை பேரெழுச்சியுடன் நடத்திடு வோம். வளர்ச்சி என்பது அனைவருக்கு மானதாக இருப்பதை, போராட்டங் களே தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து, போராடுவோம், முன்னேறுவோம்.  தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மே தின  தொழிலாளர் பேரணி பொதுக் கூட்டங்கள் சிறக்க இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு வாழ்த்துச் செய்தி யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.