tamilnadu

img

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்!

போரை மாய்ப்போம்,  மனிதம் காப்போம்! 

முதலமைச்சர் வேண்டுகோள்

 சென்னை, ஜூன் 20 - உலக அகதிகள் தினத்தையொட்டி (ஜூன் 20), முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் தமது, சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் “பொல் லாத போர்களின் மோச மான விளைவே நாடற்ற மனிதர்கள்.  மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ் விழந்து ஏதிலிகளாக புலம்  பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைக்க வேண்டும். நமது ஆட்சியில் ‘அகதிகள் முகாம்’ என்ப தை ‘மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றி, அன்னை தமிழ் உறவுகளின் மாண்பை போற்றினோம்.    போரை மாய்ப் போம், மனிதம் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.