tamilnadu

img

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டில் சென்னை, கோவை,  மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் சட்ட சபையில் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.290 கோடி மதிப்பீட்டில்  உலகத் தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக் கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் காணொலி வாயிலாக நூலகத் திற்கு அடிக்கல் நாட்டினார். திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகர ளவையில் 4.57 ஏக்கரில் 1,97,337 சதுரடி  அளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமையவுள்ளது. மேலும், இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒரு கால பூஜை திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ள 17 ஆயிரம் கோவில்களுக் கான வைப்பு நிதியினை தலா ரூ.2.50  லட்சமாக உயர்த்திட ரூ.85 கோடி  மற்றும் இத்திட்டத்தை விரிவுபடுத் தும் வகையில் கூடுதலாக 1,000 கோவில் களுக்கு ஒருகால பூஜை மேற்கொள்வ தற்கு ஏதுவாக ஒவ்வொரு கோவி லுக்கும் தலா ரூ.2.50 லட்சம் வீதம் (மொத்தம் ரூ.25 கோடி) என மொத்தம் ரூ.110 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப் படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் தலைமை நிதி அலு வலர் பி.ஜமிலாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  மேலும், விரிவுபடுத்தப்பட்ட 1,000  ஒருகால பூஜைத் திட்ட கோவில் களுக்கு அதற்கான ஆணைகளை வழங் கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களி டம் ஆணைகளை வழங்கினார்.