tamilnadu

img

விளையாட்டு

உலக அளவிலான ஊக்கமருந்து சோதனை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முதலிடம்

உலக அளவில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கும் வீரர் - வீராங்கனைகளின் பட்டி யலில் இந்தியா தொடர்ந்து மூன்றா வது ஆண்டாக முதலிடம் பிடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு  முகமை (WADA) டிச., 16 அன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டில் ஊக்கமருந்து பயன் படுத்தும் நாடுகளின் உலகளாவிய தர வரிசையில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இது அந்நாட்டுக்கு கிடைத்துள்ள ஒரு அவமரியாதை யான ‘ஹாட்ரிக்’ சாதனையாகக் கரு தப்படுகிறது. இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) 2024-ஆம் ஆண்டில் 7,113 சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்தது. இதில் 260 மாதிரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் ‘பாசிட்டிவ்’ முடிவு களைப் பெற்றுள்ளது. இது இந்தி யாவிற்கு பெரிய பின்னடைவாகும். 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தத் தயாராகி வரும் இந்தியா, அதன் தொடர்ச்சியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் லட்சியத்தை கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நி லையில் ஊக்கமருந்து  அறிக்கை கவ லையை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக தடகளத்தில் 76 வழக்கு கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த படியாக பளுதூக்குதல் (43) மற்றும் மல்யுத்தம் (29) ஆகிய பிரிவுகளில் அதிகளவிலான ஊக்கமருந்து வழக்குகள் பதிவாகின. 2022 மற்றும்  2023 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா  ஊக்கமருந்து விதிமீறலில் முத லிடத்தையே பிடித்திருந்தது. இந்தியா வை தொடர்ந்து 91 பாசிட்டிவ் வழக்கு களுடன் பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 85 வழக்குகளுடன் இத்தாலி மூன்றாவது இடத்தி லும் உள்ளன. ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலா 76 வழக்குகளுடன் 4 மற்றும் 5ஆவது இடங்களிலும், ஜெர்மனி (54),  சீனா (43) 6, 7 ஆவது இடங்களிலும் உள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது. நாடா மழுப்பல் இதுதொடர்பாக நாட்டின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (நாடா - NADA) வெளியிட்டுள்ள அறிக் கையில், “சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு  கட்டமைப்பு கணிசமாக வலுப்படுத்தப் பட்டுள்ளது. விளையாட்டில் ஊக்க மருந்து அச்சுறுத்தலைச் சமாளிக்க, சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வரு கிறோம். இதனால் இந்தியா மீண்டும்  முதலிடம் பிடித்துள்ளது” என மழுப்ப லாக கூறியது. 

டி-20 கோப்பையை இந்தியா வெல்லுமா? இன்று கடைசி போட்டி

டெஸ்ட், ஒருநாள், டி-20 என 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், 3  போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றின. 5 போட்டிகளைக் கொண்ட டி-20  தொடர் டிச., 9 அன்று தொடங்கி யது. முதல் போட்டியில் இந்தியாவும்,  2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக் காவும், மூன்றாவது போட்டியில் இந்தி யாவும், 4ஆவது போட்டி மோசமான காலநிலையால் ரத்து செய்யப்பட் டது. தற்போது டி-20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டி-20 கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயம் செய்யும் 5ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 3-1 என்ற கணக்கில் அந்த அணி கோப்பையை வெல்லும். தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் 2-2 என்ற கணக்கில் டி-20  தொடர் சமனில் முடிவடையும். மோச மான காலநிலையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் இந்தியாவிற்கே கோப்பை கிடைக்கும்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடம் : அகமதாபாத், குஜராத் நேரம் : இரவு 7 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)