tamilnadu

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குக! ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குக! 
ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாலுக்கான ஊக்கத் தொகையை 3 ரூபாயும், பால் கொள்முதல் விலையை  லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி சுட்டெரிக்கும் வெயி லில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் காந்தி பூங்கா முன்பு, தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர் சங்கம் சார்பில், தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டக்  குழு உறுப்பினர் சொக்கலிங்கம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணிவேல், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எம்.வெங்கடாசலம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்  ஆர்.ரவீந்திரன், மாதர் சங்க மாவட்டத்  தலைவர் பி.பத்மாவதி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.தியாக ராஜன், ஆண்டிமடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர்  ஆர்.இளவரசன், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மீனா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் ஆர்.தனவேல் ஆகியோர் உரையாற்றினர்.  விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.சேகர், கோ.மதிய தாஸ் ஆகியோர் பால் உற்பத்தியாளர் கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10  ரூபாய் உயர்த்தி வழங்கவும், வேளாண்  விளைபொருட்களுக்கு ஆண்டுதோ றும் விலை அறிவிப்பது போல், பாலுக்கும் விலையை உயர்த்தி அறி விக்க வேண்டும். தமிழகத்தில் ஆவி னுக்குச் சொந்தமான அனைத்து தீவன  ஆலைகளையும் முழுமையாக இயக்கி  50 சதவீத மானியத்தில் உற்பத்தியாளர் களுக்கு தீவனம் வழங்க வேண்டும்.  கடைவீதியில் சுற்றித் திரியும்  கால்நடைகளால் சாலையோர வியாபா ரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் செல்லும்போது கால் நடைகள் குறுக்கே வந்து விபத்து ஏற்படுத்துகின்றன. எனவே ஜெயங் கொண்டம் நகராட்சியில் சுற்றித் திரி யும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.  ஜெயங்கொண்டம் வாரச்சந்தை கட்டுமானப் பணி நடைபெறுவதால் தற்போது தற்காலிகமாக மீன் மார்க்கெட்டில் (கோடபுல்லை குட்டை யில்) இயங்கி வருகிறது. அங்கு போதுமான இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரிய அளவில் மாற்று இடத்தை தேர்வு  செய்ய வேண்டும். புகார் கொடுக்க  வரும் பொதுமக்களை, காவல்துறை யினர் கண்ணியமாக நடத்த வேண்டும். கண்ணியம் தவறும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.