tamilnadu

யானைகள் உயிரிழப்பது எப்படி: தமிழக வனத்துறை விளக்கம்

மதுரை, ஜூலை 6- 69 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவு கொண்ட ஏழு வனச்சரகங் களை உள்ளடக்கிய கோயம்புத் தூர் வனச்சரகத்தில் மேட்டுப் பாளையம் பகுதியில் 10 நாட்க ளில் 12 நாட்கள் பலியானதாக செய்திகள் வெளியாயின. தற் போது அந்தச் செய்தியை வனத் துறை மறுத்துள்ளது. கோயம் புத்தூர் வனக்கோட்டத்தில் 180 நாட்களில் 14 யானைகள் இறந்துள்ளன. 13 யானைகள் அவைகளுக்குள் நடந்த மோத லில் உயிரிழந்துள்ளன. ஜூலை 2-ஆம் தேதி மேட்டுப்பாளையம் காப்புக்காட்டை ஒட்டியுள்ள விளைநிலப் பகுதிகளில் யானைக்கூட்டம் புகுந்துள்ளது. அதை இருவர் சுட்டதில் பென் யானை ஒன்று இறந்துவிட்டது. இது தொடர்பாக ராமசாமி, கிருஷ்ணசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யானை இறப்பது இயற்கையா னது. அதன் வாழ்விடங்களை மேம் படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். பத்திரிகைகள், ஊடகங்கள், டிவிட்டரில் வெளியான செய்தி கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என சென்னை முதன்மை தலைமை வனப்பாது காவலர் தெரிவித்துள்ளார். யானைகளின் பிறப்பும், இறப்பும் நிகழ்வது சாதாரணமா னது தான் என வனத்துறை சர்வ சாதாரணமாக சம்பவத்தை கடந்து சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே வருத் தத்தை ஏற்படுத்தியுள்ளது.