ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படு வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, செய்யூர் தொகுதி திமுக உறுப்பினர் ஆர்.டி.அரசு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “ரசாய னம் தடவிய மீன்கள் விற்பனை என்பது வெறும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம்” என்றார். மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட மீன்களில் ரசாயனம் தடவியிருந்தது தெரியவந்ததை அடுத்து, உடனடியாக பறிமுதல் செய்யப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தரமான மீன்கள் விற்பனை செய்யப்படு வதாகவும், மீன் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் நீண்ட ஆயு ளுடன் நலமுடன் வாழலாம் என்றும் அமைச்சர் கூறினார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.