சென்னை: இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து, நாட்டின் அறிவுசார் தலைநக ராக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட மிகப்பெரிய இடைவெளியுடன் 23 சதவீதம் வளர்ச்சி கண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பதிவுக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் 68,201 காப்புரிமைகளில் தமிழ்நாடு மட்டுமே 15,440 காப்புரி மைகளை பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 23 சதவீதம். முந்தைய 2023-2024 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடு கையில், 2024-2025 ஆம் நிதியாண்டில் காப்புரிமை தாக்கல் செய்வது 9,565-லிருந்து 15,440-ஆக உயர்ந்துள்ளது. இந்த 62 சதவீதம் வளர்ச்சி, மாநிலத்தில் உள்நாட்டுக் கண்டு பிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேகமாக விரைவுபடுத்தப்பட்டு வருவதை பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டின் ஆழமான ஆராய்ச்சித் தளம், வலுவான தொழில்முறை வலிமை, கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே நிலவும் நெருக்க மான ஒருங்கிணைந்த சூழல் ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய கடுமையான உழைப்புகளின் பயனாக தமிழ்நாடு 2021 ஆம் ஆண்டு தொடங்கி அபரிமித மான முன்னேற்றங்களை படைத்து இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக எழுச்சி பெற்றுள்ளது.