tamilnadu

img

சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுக! பரிந்துரைகள் வெளியீட்டு நிகழ்வில் அரசுக்கு வலியுறுத்தல்

சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுக! பரிந்துரைகள் வெளியீட்டு நிகழ்வில் அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை, ஜன. 7 - சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை, எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர  வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது பற்றி ஆராய, உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் கே.என். பாஷா தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழங்கப்பட உள்ள பரிந்துரைகள், புதனன்று (ஜன.7) சென்னை பத்தி ரிகையாளர் மன்றத்தில் வெளியிடப் பட்டன. ‘தமிழ்நாடு இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் ‘கௌ ரவம்’ என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்டம்-2026’ என்று பெயரிடப்பட்ட இந்தப் பரிந்துரைகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை வெளி யிட்டார். அதனை ஆணவக் கொலை யால் பாதிக்கப்பட்ட அனுசுயா, அபி ராமி, திலீப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டாக்டர் அம்பேத்கருக்கும் மநுவுக்கும் இடையிலான போராட்டம் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி  பேசிய முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன், “சாதி ஆணவக்கொலைக்கு எதிராக களப் போராட்டம், கருத்துப் போராட்டம், சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். திலீப் வழக்கு, சக்தி வாகிணி வழக்கு தீர்ப்புகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாக்கம் இருந்தது” என்றார். “குற்றங்களைத் தடுப்பது மற்றும் குற்றங்களின் உள்நோக்கத்தையும் புரிந்து செயலாற்றக் கூடியதாக தற்போதுள்ள சட்டங்கள் இல்லை. தனி நபர் குற்றங்களை, சமூக ஒப்புதல் பெற்று செய்யப்படும் கூட்டுக்குற்றமாக கருதாத நிலை உள்ளது. குற்றத்தைத் தடுப்பது, பாதுகாப்பு, தண்டனை வழங்குவது, மறுவாழ்வு தருவது மற்றும் சமூகத்துடன் உரையாடும் வகையில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இருக்க வேண்டும். அம்பேத்கருக்கும் மநுவுக்கும் இடையேயான சித்தாந்தப் போராட்டம் என்ற வகையில் புதிய சட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ப பரிந்துரை களை வரைவுச் சட்டமாக கொடுக்க உள்ளோம்” என்றார். தேர்தலுக்கு முன்பே சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்! இந்நிகழ்வின் அழைப்பிதழை பார்த்து தொடர்புகொண்டு பேசிய நீதி யரசர் கே.என். பாஷா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பரிந்துரை களுக்காக ஆவலுடன் காத்திருப்ப தாக தெரிவித்ததைக் கூறி, நோக்க வுரையாற்றிய முன்னணியின் பொதுச் செயலாளர் பி. சுகந்தி, “ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகத்திலும் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறோம். மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், பாதுகாப்பு அதிகாரி நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரை களை அளித்துள்ளோம். பரிந்துரை களை முழுமையாக ஏற்றால் அந்தச் சட்டம் சிறப்பானதாக அமையும்” என்றார். “வரவிருக்கிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆணையத்தின் பரிந்து ரைகளை பெற்று அரசு சட்டத்தை கொண்டு வர வேண்டும் அல்லது தேர்தலுக்கு முன்பாக சிறப்பு அமர்வு நடத்தி சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் கூறினார். எம். சின்னதுரை எம்எல்ஏ கே.என்.பாஷா ஆணையம் அமைக்கப்படுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தொடர் நடவடிக்கை, எஸ்சி/எஸ்டி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்ட வலி யுறுத்தல்கள்; தீண்டாமை ஒழிப்பு முன்னணி அதனை சமூகத்தில் விவாத மாக மாற்றியது போன்ற அம்சங் களை சுட்டிக்காட்டி எம். சின்னதுரை எம்எல்ஏ பேசினார்.  எஸ்சி/எஸ்டி வழக்கில் எதிர்வழக்கு போடுவது தொடர்கிறது. அபிராமி கணவர் ஆணவக்கொலை வழக்கில், வன்கொடுமைக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து நியாயத்தை பெற்றுத்தருவோம். வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் 8  நீதிமன்றங்களில் நீதிபதி கள் கிடையாது. பொறுப்பு நீதிபதிகள் வருவதே இல்லை. வன்கொடுமை வழக்கில் சர்வசாதாரணமாக ஜாமீன் தரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞரை, சாதி ரீதியாக பார்க்கின்றனர். அங்கேயும் சாதி விளையாடுகிறது. ஜனவரி 20 அன்று ஆளுநர் உரைக்காக நடைபெறும் கூட்டத்தை தொடர்ந்து அடுத்து நடைபெறும் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வர இந்த பரிந்துரைகள் உதவும். சட்ட மன்றத்திற்கு உள்ளேயும் வலுவான குரலை எழுப்புவோம்” என்றார். “7ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த எஸ்சி/எஸ்டி கண்காணிப்பு குழுக்கூட்டத்தை, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பலமுறை நடத்தி பல கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளது. இந்தக்கூட்டத்தில், சிபிஎம் வலியுறுத்தலையடுத்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதேபோன்று ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். சிறப்பு உட்கூறு திட்டத்தின் செய லாக்கத்தை கவனிக்க, கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் தலித் விடு தலைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத்தலைவர் கே. சாமு வேல்ராஜ், முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, துணைப் பொதுச்செயலாளர் இ. மோகனா, மாநிலச் செயலாளர்கள் க. வேணி, ச. லெனின், வழக்கறிஞர்கள் டி.ஆர். உதயகுமார், கே.சி. காரல் மார்க்ஸ் மற்றும் கு. ஜக்கையன் (ஆதித்தமிழர் கட்சி), வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), வி.பி. வேல்முருகன் (தியாகி இமானுவேல் பேரவை), டிங்கன் குமரன் (தபெதிக),  டி.ஜி. சம்பத் (தமிழ்நாடு பன்னியாண்டி கள் சங்கம்), லெனின் கென்னடி (தமிழர் உரிமை மீட்பு களம்), தலித் நதியா (தலித் விடுதலை இயக்கம்), தமிழன்பன் (விடுதலை வேங்கைகள் கட்சி), சீனிவாசராகவன் (மக்கள் விடுதலைக் கழகம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னணியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் நன்றி கூறினார். முன்னதாக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே. முருகன் வரவேற்றார்.