tamilnadu

img

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் பலத்த காற்று காரணமாக கடலுக்கு செல்ல முடியவில்லை

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் பலத்த காற்று காரணமாக கடலுக்கு செல்ல முடியவில்லை

குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம், இதர செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மீனவர்கள்

தூத்துக்குடி, ஜூன் 17 - தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடைந் தது. ஆனாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்த பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக இயந்தி ரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் இன் னும் பயணம் செய்யத் தொடங்கவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத் தின் அறிக்கையின்படி, ஜூன் 14 முதல் 5 நாட்களுக்கு தென் தமிழக கடற்கரை, கொமோரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் இருந்து  65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் இயந்திரமய மாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் கரை யில் தங்கியிருக்க வேண்டும் என தக வல் வெளியாகியது. வானிலை எச்சரிக் கையைத் தொடர்ந்து, இயந்திரமயமாக் கப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு “பட கோட்டம் டோக்கன்கள்” வழங்குவதை தென் தமிழக கடற்கரை ஒட்டிய மீன்வளத் துறை நிறுத்தி வைத்துள்ளது. இத னால் மீனவர்கள் தங்கள் குழந்தை களுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தவிக்கும் மீனவர்கள் ஜூன் 14ஆம் தேதியுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்தது. இத னால் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் பள்ளிக் கட்டணம் மற்றும் இதர செலவுகளை பார்த்துக் கொள்ளலாம் என மீனவர்கள் எதிர் பார்த்து இருந்தனர். ஆனால் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக கட லுக்குச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ள நிலையில், “நாங்கள் வறண்டு கடனில் மூழ்கிவிட்டோம். கடலுக்குச் செல்லாமல், கரையில் தொடர்ந்து தங்குவது வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும்” என தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறியுள்ளார். அதே போல தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கடையைச் சேர்ந்த மீனவரான தொம்மை அந்தோணி,“தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த கடன் வாங்க வேண்டியுள் ளது. மேலும் மீன்பிடி வேலையை தொட ங்கினால் மட்டுமே, அதை திருப்பிச் செலுத்த முடியும்” என்று கூறினார். தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செய் தியாளர்கள் சந்திப்பின் போது கூறு கையில், “வானிலை முன்னறிவிப்பின் படி காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரையில் தங்கியிருக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு மீன் பிடிக்க சாதகமாக அமைந்தவுடன் “பட கோட்டம் டோக்கன்” வழங்கப்படும். அதுவரை டோக்கன் வழங்கப்படாது. மீனவர்களுக்கு ஆபத்தை விளை விக்கும்” என அவர் கூறியுள்ளார்.