நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே செல்லாக்காலனியில் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல ஆணையினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அருகில் அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் உள்ளிட்டோர்.
வகங்கை மாவட்டத்திற்கு செவ்வாயன்று வருகை தந்த துணை முதல்வர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று, மாணவர்களோடு மதிய உணவு சாப்பிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.