மதுரையில் சிபிஎம் நடைபயண பிரச்சாரம்
ந்திப்பு நசெவ்வாயன்று மதுரை மாநகரில் மக்கள் சடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. மத்திய 2ஆம் பகுதி சார்பில் சிம்மக்கல் தைக்கால் பாலம் அருகில் பகுதிச் செயலாளர் பி.கோபிநாத் தலைமையில் பிரச்சாரம் துவங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், அ.கோவிந்தராஜன், ஜெனரல் இடைக்கமிட்டி செயலாளர் எஸ். சந்தியாகு, மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஜீவா உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். மதுரையில் கனரக தொழிற்சாலை, நெய்பர் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கிட வேண்டும். சிட்காட் - மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவில் துவக்கிட வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீர்படுத்தி சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைத்திட உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்திட வேண்டும் என்று பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது.