சிபிஎம் பிரச்சார இயக்கம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்துச் சொல்லும் விதமாக நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் நடைபெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான நாகை மாலி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
செவ்வாயன்று மதுரை மாநகரில் மக்கள் சந்திப்பு நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. மத்திய 2ஆம் பகுதி சார்பில் சிம்மக்கல் தைக்கால் பாலம் அருகில் பகுதிச் செயலாளர் பி.கோபிநாத் தலைமையில் பிரச்சாரம் துவங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், அ.கோவிந்தராஜன், ஜெனரல் இடைக்கமிட்டி செயலாளர் எஸ். சந்தியாகு, மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஜீவா உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் மதுரை புறநகரில் 3 நாள் பிரச்சாரம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நடைபயணத்தின் நிறைவாக, சேடப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய ஒன்றிய குழுக்கள் சார்பில் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராமர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.முருகன், வி.சமையன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர். பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசினார். அய்யங்காளை நன்றி கூறினார்.