tamilnadu

img

பஞ்சப்பூரில் இடம் ஒதுக்கக் கோரி சிஐடியு தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

பஞ்சப்பூரில் இடம் ஒதுக்கக் கோரி சிஐடியு தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள்  மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப், 1-  திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பஞ்சப்பூர் பேருந்து நிலைய சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதை தடை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில், திங்களன்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் மணிமாறன், சிவக்குமார், சந்திரசேகர், சந்திரன், சார்லஸ் ஆகியோர் பேசினர்.  இதில் தரைக்கடை சங்க நிர்வாகிகள் சுரேஷ், புஷ்பாகரன். ஷேக்மொய்தீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.