tamilnadu

img

உ.பி.,யில் பயணிகள்  ரயில் மீது தாக்குதல் பாஜக ஆளும்

உ.பி.,யில் பயணிகள்  ரயில் மீது தாக்குதல் பாஜக ஆளும்

உத்தரப்பிரதேச மாநிலம் வன்முறைக் களமாக மாறி வருகிறது. அம்மாநிலத் தில் வன்முறை இல்லாத நாட்களே இல்லாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தின் கான்பூர் அருகே உள்ள பீம்சென் ரயில் நிலையம் அருகே,  ஞாயிற்றுக்கிழ மை இரவு சுமார் 9 மணியளவில் வார ணாசியில் (உ.பி.,) இருந்து இந்தூர் (ம.பி.,) நோக்கிச் சென்று கொண்டிருந்த “மகாகால் எக்ஸ்பிரஸ்” பயணிகள் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குத லில், ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டி யின் கண்ணாடி ஜன்னல் சேதம டைந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பய ணிகள் பதற்றத்துடனே இந்தூருக்குச் சென்றுள்ளனர். பீம்சென் ரயில் நிலையம் “மகாகால் எக்ஸ்பிரஸ்” மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக கூறப்பட்டாலும், கோவிந்த்புரி நிலை யத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தி லேயே கல்வீச்சு நடத்தப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை திங்களன்று காலை தெரிவித்தது என்பது குறிப்பி டத்தக்கது.