ரூ.86 ஆயிரம் கோடியை திரும்பவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக பலரும் விடுத்து வருகிறபோது, கூடுதல் நிதி ஒதுக்கப் படாதது கிராமப்புறங்களில் கடுமையான வறுமையை அதிகப்படுத்தும்.
உர மானியம், எரிபொருள் மானியங்களில் வெட்டு
அதேபோல், கடந்தாண்டு விவசா யத்துக்கு ஒதுக்கிய உர மானியம் ரூ. 3600 கோடி, பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியம் ரூ. 2200 கோடி ஆகியவை வெட்டப்பட்டுள்ளன. இது விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தி யாவில் பல மாநிலங்களில் டீசல் இன்ஜினை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வரு கிறது. இதனால், பெட்ரோல், டீசல் பொருள் கள் விலை உயர்ந்து விவசாயத்தில் பெரு மளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை.
90 சதவிகித மக்களுக்கு எதிரான பட்ஜெட்
மொத்தத்தில் ஏழைகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையால் விலைவாசி உயரும், வேலையின்மை அதிகரிக்கும், இந்தியாவில் உள்ள 90 சதவீத மக்களை பாதிக்கக்கூடிய நிதி நிலை அறிக்கையாக உள்ளது ஆகவே இந்த பாரபட்சத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பட்ஜெட் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் சார்பாக மாநிலம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.முருகை யன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.