tamilnadu

மதுரை புறநகரில் 3 நாள் நடைபயணம் நிறைவு

மதுரை புறநகரில் 3 நாள் நடைபயணம் நிறைவு

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் மதுரை புறநகரில் 3 நாள் பிரச்சாரம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நடைபயணத்தின் நிறைவாக, சேடப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய ஒன்றிய குழுக்கள் சார்பில் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராமர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.முருகன், வி.சமையன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர். பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசினார். அய்யங்காளை நன்றி கூறினார்.