11 மாதங்களில் 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம் அமெரிக்க
ஜனாதிபதியாக ஜனவரி 20ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அமெரிக்காவில் இருந்து வெளி யேற்றப்படும் இந்தியர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்கள், விசா காலத்தை கடந்து தங்கியவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளி யேற்றப்பட்டதாக அந்நாட்டு குடியுரிமை ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், கடந்த 16 ஆண்டு களில் இல்லாத வகையில் 2025ஆம் ஆண்டில் அதிகளவிலான இந்தி யர்கள் அமெரிக்காவில் இருந்து வெளி யேற்றப்பட்டுள்ளார்கள் என நாடாளு மன்றத்தில் மோடி அரசு ஒப்புக்கொண் டுள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதிலில்,”கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 18,822 இந்தி யர்கள், அமெரிக்காவில் இருந்து வெளி யேற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதன்படி 2023ஆம் ஆண்டில் 617 இந்தி யர்களும், 2024இல் 1,368 இந்தியர்க ளும் வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக 2025 ஜனவரி முதல் நவம்பர் 28 வரை 3,258 இந்தியர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்” என அதில் கூறப் பட்டுள்ளது.