கோயம்புத்தூரில் மாறுபட்ட 1,820 வகையான உயிரினங்கள் கண்டுபிடிப்பு
கோயம்புத்தூர், ஜூன் 17 - உலகளாவிய “பயோப்ளிட்ஸ் - சிட்டி நேச்சர் சேலஞ்ச்” (Global Bioblitz -City Nature Challenge) 10ஆவது பதிப்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அமைப்பு களின், 150க்கும் மேற்பட்ட ஆய்வாளர் கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது 1,820 வகையான மாறுபட்ட உயிரினங்கள் (taxa) கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கணக்கெடுப்பு முயற்சி யில் கோயம்புத்தூர், இந்தியாவில் பங் கேற்ற நகரங்களில் 7ஆவது இடத்தை பிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 1,820 வகையான உயிரினங்களில் 81 சிலந்தி இனங்கள், 90 வகையான பறவை இனங்கள், 62 பட்டாம்பூச்சி இனங்களும் அடங்கியுள்ளன. கோவை நகர பறவை அட்லஸ், கோவை இயற்கை சங்கம், மர அமைப்பு டபிள்யு.டபிள்யு. எப் (WWF) - கோவை, குமரகுரு நிறுவனங்கள், இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்கம், அரசு கலைக் கல்லூரி, இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (NCS), பார் எர்த் பவுண்டேஷன், லைப் டிரஸ்ட் இந்தியா, யுவபாரதி பப்ளிக் பள்ளி, ஓசை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, நெஸ்ட் (NEST) மற்றும் சித்தார்த் பவுண்டேஷன் ஆகியவற்றின் உறுப்பினர்கள், மாணவர்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். சிஎன்சி 2025 கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் முரு கானந்தன் கூறுகையில்,”நகர இயற்கை சவால் என்பது குடிமக்கள் அறிவியலை ஊக்குவிக்கும். அதே வேளையில் மக்களை இயற்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும். இது அனைத்து தரப்பு மக்களையும் பல்லுயிரியலை ஆவணப்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கிறது. இயற்கை உலகத்துடனான நமது தொடர்பை ஆழப்படுத்தவும் பாதுகாப்பு முயற்சி களை ஆதரிக்கவும் ஒரு சக்திவாய்ந்த தளமாக செயல்படுகிறது” என அவர் கூறினார். மேலும் டபிள்யு.டபிள்யு.எப் சரவணன் கூறுகையில், “இந்த ஆண்டு நிகழ்வை குறிப்பிடத்தக்கதாக மாற்றி யது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் துடிப்பான பங்கேற்பு தான். அவர்களின் ஈடுபாடு இளைஞர்களிடையே பல்லுயிர் பெருக்கம் குறித்த வளர்ந்து வரும் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் பிரதிபலித்தது” என அவர் கூறினார்.