tamilnadu

img

‘ஏழைகள் அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்’

‘ஏழைகள் அட்டையைத் தேய்க்க,  பணக்காரர்கள் திளைக்கிறார்கள்’

ஏடிஎம்-களில் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால், மே 1 முதல் ஒரு பரிவர்த்த னைக்கு ரூ. 23 கட்டணமாக வசூலிக்க வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால், வங்கி வாடிக்கை யாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.  இந்த நிலையில், இந்த நடவடிக்கை ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்து விடும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது சமூகவலைத் தளத்தில், “அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து என்ன? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்ட ணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் வரை கட்ட ணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ்  வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும்.  குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்து விடும். ஏற்கனவே நிதி விடுவிக்கப் படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.  இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்; ஏழைகள் ஏடிஎம் அட்டை யைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்” எனப் பதி விட்டுள்ளார்.