கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
வெடி விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு குடோன் வெடி விபத்து காரணமாக அருகிலுள்ள 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.