கிருஷ்ணகிரி, நவ.21- ஊத்தங்கரை வட்டம் காட்டேரியில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில முனைவர் பட்டத்திற்கான பொது வாய்மொழித் தேர்வு தமிழ் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அருள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும் அகத்தேர்வாளரும் ஆய்வு நெறி யாளருமான முனைவர் தெய்வம் நிகழ்வை வழி நடத்தினார். சிறப்பு விருந்தினரும் புறத் தேர்வாள ரும், திருச்சி அரசுக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் சி பானுமதி துவக்க உரையாற்றினார்.முனைவர் பட்ட ஆய்வாளர் சத்தியா “சமூக மேம்பாட்டில் அகநானூறு” ஆய்வறிக்கை சமர்ப்பித்து பேசினார். அகம் சார்ந்த அச்சூழல் பற்றியும் தொழில், நிலம் சார்ந்த இனக்குழு சமூ கம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டே வந்ததையும், வீட்டில் இருந்த பெண்கள் அப்போதே பண்பு கலாச்சா ரம் எனும் பேரில் வீட்டுக்குள் இருத்தி வைக்கப்பட்டதையும், அரசர்கள் தன்னை விட பலம் வாய்ந்த அரசர்க ளுக்கு அடிமைப் பெண்களாக கொண்டு மகளிரை பரிசாக வழங்குவதும், அவர் களை பறத்தையர்களாகவும், அடி மைப்படுத்தி பயன்படுத்தி வந்ததும், அச்சூழலிலேயே காதல் வாழ்க்கை இருந்தது உட்பட பல விசயங்கள், அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள தாகவும் ஆய்வில் குறிப்பிட்டார். ஆய்வு குறித்து பரீட்சித்த பின்பு புறத் தேர்வாளர் முனைவர் பானுமதி ஆய்வா ளர் சத்யாவிற்கு முனைவர் பட்டம் தர லாம் என பெரியார் பல்கலைக் கழ கத்திற்கு பரிந்துரை செய்தார். இதில் கல்லூரி தாளாளர் சாந்தி சேகர், தமிழ்த்துறையின் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.