tamilnadu

தலித் மயானம் ஆக்கிரமிப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 6- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடுச்சிப்பள்ளி கிராமத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் மயானம் பல தலைமுறைகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியை யும் அருகில் உள்ள ரயில்வேக்கு சொந்த மான நிலத்தையும், ஆக்கிரமிக்க தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து வருகிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடு  பட்டனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த கெலமங்கலம் காவல்துறையினர் தனி நபர் ஆக்கிரமித்து வேலி போடுவதை தடுத்து  நிறுத்தியதுடன் இரு பிரிவினரிடமும் பேச்சு நடத்தினர். இது குறித்து போடிச்சிபள்ளி வாலிபர் ஆனந்தன், பெரியவர் நாராயணப்பா கூறுகை யில், பல தலைமுறைகளாக இறந்தவர்களை இங்குதான் புதைத்து வருகிறோம். எங்கள் பயன்பாட்டில் உள்ள மயானத்தையும் அரு கில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான நிலத்தையும்  ஆக்கிரமிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. மாவட்ட நிர்வாக மும், காவல்துறையும் அவர் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மயா னத்திற்கு வேலியும், ஆழ் துளை கிணறும் அமைத்து, மயான மண்டபமும் கட்டித் தர வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.