திருவனந்தபுரம்: சக பத்திரிகையாளரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய திருவனந்தபுரம் பிரஸ் கிளப் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் அந்த பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது உறுப்பினர் தகுதியும் நீக்கப்பட்டுள்ளதாக பிரஸ் கிளப்பின் இணை செயலாளர் சப்லு தாமஸ் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராதாகிருஷ்ணனை பிரஸ் கிளப்பிலிருந்து வெளியேற்றக்கோரி திருவனந்தபுரத்தில் திங்களன்று ஊடகங்களில் பணியாற்றம் பெண்கள் அமைப்பு (Net Work of Women in Media) தலைமையில் பெண் ஊடகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகம் முன்பிருந்துதிருவனந்தபுரம் பிரஸ் கிளப்புக்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏராளமான ஆண் ஊடகத்தினரும் பங்கேற்றனர்.முன்னதாக பெண் ஊடகவியலாளரையும் அவரதுகுடும்பத்தினரையும் தாக்கியதாக அளித்த புகாரைத் தொடர் ந்து ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர். செய்திகள் அடிப்படையில் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.