tamilnadu

படப்பிடிப்பு அரங்கு அகற்றும் பணி காலடியில் தொடக்கம்

கொச்சி, ஜுன் 4- டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் ‘மின்னல் முரளி’ திரைப் படத்திற்காக காலடியில் அமைக்கப்பட்ட தேவாலய அரங்கை பஜ்ரங்தள குண் டர்கள் தகர்த்தனர். எஞ்சிய பகுதிகளை அகற்றும் பணியை அரங்க அமைப்பா ளர்களே செய்து வருகின்றனர்.  காலடியில் உள்ள புகழ்பெற்ற மணப்புறம் கிறித்தவ தேவாலயத்தைப் போன்ற மாதிரி தேவாலய அரங்கை மதப் பகைமையுடன் பஜ்ரங்தள் குண்டர்கள் அடித்து நொறுக்கினர். அதற்கு திரைத் துறையினர் உட்பட பல்வேறு அமைப்பி னர் கண்டனம் தெரிவித்தனர். காலடி சிவா லயத்தின் அதிகாரிகள் மற்றும் பஞ்சா யத்து நிர்வாகத்தின் அனுமதி பெற்று இடத்துக்கான வாடகையையும் படக்குழு வினர் வழங்கி இருந்தனர்.

அதன் அடிப் படையில் கடந்த பிப்ரவரி மாதம் மணப் புறத்தில் கிறித்தவ தேவாலய மாதிரி அரங்கு அமைத்தனர். ஆனால், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடர வேண்டிய நிலையில் கடந்த மே 24 ஆம் தேதி வகுப்பு வாதிகள் அந்த அரங்கை அடித்து நொறுக்கினர்.  படப்பிடிப்பு அரங்கை அடித்து நொறுக்கியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப் பின்போது தெரிவித்திருந்தார். அதன்படி  முக்கிய குற்றவாளியான கார ரதீஷ் உட் பட 5 நபர்களை பெரும்பாவூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் தொடர்புடைய வேறு சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை.