tamilnadu

img

கேரளத்தில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்களை மகாராஷ்டிர மாநிலத்திற்கு அனுப்ப கோரிக்கை

மும்பை, மே 26- கோவிட் சிகிச்சைக்காக 50 சிறப்பு மருத்துவர்கள், 100 செவிலியர்களை அனுப்பி உதவுமாறு மகாராஷ்டிர அரசு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.  மகாராஷ்டிர மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எழுதியுள்ள இந்த கடிதத்தில், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.80,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்டி/எம்எஸ் சிறப்பு மருத்துவர்களுக்கு படிகள் உட்பட ரூ.2 லட்சம் வழங்குவதாகவும், செவிலி யர்களுக்கு ரூ.30,000 சம்பளம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தங்கும் இடம், உணவு, மருந்துகள், பாதுகாப்பு கருவிகள் போன்றவற்றை அரசே வழங்கும்.

முன்னதாக இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபெ கேரள அமைச்சர் சைலஜாவை தொடர்பு கொண்டு பேசி னார். தேவையானால் மருத்துவ நிபுணர்க ளையும் செவிலியர்க ளையும் அனுப்ப தயார் என அப்போது சைலஜா தெரிவித்தார். அதை தொடர்ந்து அதி காரப்பூர்வமான கடிதத்தை மகாராஷ்டிர அரசு அனுப்பியுள்ளது. கோவிட் பரவல் அதி கரித்து வரும் சூழ்நிலையில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ்-இல் 600 படுக்கைகள் கொண்ட கோவிட் சுகாதார மையம் அமைக்கப்பட உள்ளதாக கோவிட் தடுப்புக்கான சிறப்பு (நோடல்) அதிகாரி டாக்டர் டி.பி.லகானே தெரிவித்தார். இங்கு 125 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை (ICU) பிரிவு தொடங்க உள்ளதா கவும் அவர் கூறினார். இங்கு சிகிச்சை  அளிக்கவே பயற்சி பெற்ற மருத்து வர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவை  அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 52,667 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 15,786  பேர் குணமடைந்துள் ளனர். தற்போது சிகிச்சையில் 33,988 பேர் உள்ளனர். 1,695 பேர் உயிரிழந்தனர்.