திருவனந்தபுரம்:
கேரள பல்கலைக்கழக செனட் தேர்தலில்இந்திய மாணவர் சங்கம் வரலாற்று வெற்றியை மீண்டும் பெற்றுள்ளது.வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோதே, தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், 15 நிர்வாக குழு உறுப்பினர்களில் 13 இடங்கள், கணக்குக் குழு, மாணவர் கவுன்சிலில் ஆகியவற்றில் அனைத்து இடங்கள் மற்றும் செனட்டில் உள்ள 10 இடங்களில் 7 இடங்களுக்கு எஸ்எப்ஐ தலைமையிலான குழுவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம்:அனிலா ராஜு (தலைவர், டி.கே.எம். கல்லூரி,ஆலப்புழா), நகுல் ஜெயச்சந்திரன் (பொதுச்செயலாளர், அரசு சமஸ்கிருத கல்லூரி, திருவனந்தபுரம்), ஆயிஷா பாபு (எஸ்.என். கல் லூரி, கொல்லம்), ஸ்ருதி பி.வி (இக்பால் கல்லூரி), த்ரிஷ்யமால் டி.கே (என் எஸ்.எஸ்.கல்லூரி பந்தளம்) ஆகியோர் துணைத் தலைவர்களாக போட்டியின்றி வென்றார்.