திருவனந்தபுரம், ஜுலை 22- கேரளத்தில் செவ்வாயன்று 720பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்பு மூலம் 528 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் நோய் தொற்றிடம் தெரியாத 34பேர் உள்ளனர். செவ்வாயன்று கோவிட்-19 ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து மேலும் கூறியதாவது: செவ்வாயன்று நோய் தொற்று ஏற்பட்டதில் 82 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 54 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். 17 சுகாதாரத்துறை ஊழியர்கள் கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாயினர். திருவனந்தபுரம் புல்லு விளையைச் சேர்ந்த விக்டோரியா (72) கோவிட் நோயால் உயிரிழந்தார். செவ்வாயன்று 272 பேர் குணமடைந்தனர். இதோடு 5618 பேர் குணமடைந்துள்ள னர். தற்போது 7611 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,62,444 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 8277 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். செவ்வா யன்று 984 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் gட்டனர். இதுவரை 3,08,348 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. மாநிலம் முழுவதும் 353 ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளன.