குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குளித்தலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. தற்போது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனது தகவல் வெளியாகி யுள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் குளித்தலை மையப் பகுதியான பேருந்து நிலையம் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 108 சேவையை துவங்கி பொது மக்களுக்கு சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை சார்- ஆட்சிய ரிடம் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.