tamilnadu

img

சிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 101 வயது விடுதலை போராட்ட வீரர் 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் 101 வயது நிரம்பிய சுதந்திர போராட்ட வீரர்  எச்.எஸ்.தொரைசாமி 5 நாள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். 
பெங்களூருவில் டவுன் ஹால் பகுதியில் பிப்ரவரி 6 முதல் 10ம் தேதி வரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் காந்திய ஆர்வலரும், விடுதலை போராட்ட வீரருமான 101 வயது நிரம்பிய எச்.எஸ்.தொரைசாமி உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டுள்ளார். காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் திட்டமிட்டபடி பிப்ரவரி 6ம் தேதி காலை 10.15 மணியளவில் அவர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தில் சாமியானா போட வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் காவல் துறையினர் தங்களை வெயில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சாமியானாவை அமைத்துக்கொண்டனர். ஆனால் நாள் முழுவதும் 30 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாது அவர்  பங்கேற்றார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 7ம் தேதி காவல் துறையினர் கூடாரம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கினர். இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தன்னை வருத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதில்லை என்று வற்புறுத்தி வருகின்றனர். 
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நாங்கள் எங்கள் சுதந்திரத்தை பறிப்போம்... அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.