நாகர்கோவில், ஜூன் 2- நலிவடைந்த ஓவியர்களுக்கு நல வாரிய உதவி வழங்குமாறு தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் 19 தொற்று தடுப்பு நட வடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் வேலைவாய்ப் பின்மையால் ஓவியர்கள் பலர் போதிய வருமானம் இன்றி வாடும் நிலை ஏற் பட்டுள்ளது. தமிழ்நாடு ஓவியர்கள் நல வாரியத்தில் ஓவியர்கள் பலர் பதிவு செய் யாத நிலையில் தமிழக அரசு ஓவி யர்களுக்கு வழங்கி வரும் கோவிட் 19 பேரிடர் கால நல உதவிகள் எதுவும் நலி வடைந்த நிலையில் உள்ள இந்த ஓவி யர்களுக்கும் கிடைக்காத நிலை உள்ளது. மேலும் அரசு வழங்கும் எந்த சலுகை களும் கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு கோவிட் 19 பேரிடர் கால நல உதவி கள் நலிவடைந்த நிலையில் உள்ள அனைத்து ஓவியர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழ்நாடு ஓவியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயசேகரன், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் லாசர் ஒநாசிஸ், நிர்வாகி கள் கெவின், முருகன், சந்திரன் உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்தனர்.