காஞ்சிபுரம், மே 28-குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பாலாற்று கூட்டுகுடிநீரை மதுராந்தகம் பகுதிக்கு வழங்க வேண்டும்என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி வறண்ட நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால், மதுராந்தகம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க பாலாற்றில் இருந்து மதுராந்தகம் வழியாக அச்சரப்பாக்கம் வரை செல்லும் கூட்டுக்குடிநீரை மதுராந்தகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் முன்புசெவ்வாயன்று (மே 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.தயாளன் தலைமை தாங்கினார். பகுதிச் செயலாளர் கே.வாசுதேவன், மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ், ஏ.சி.எஸ். மணி, என்.ராமலிங்கம், ஆர்.சோமசுந்தரம், சுப.சேகர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.மாசிலாமணி, வட்டக்குழு உறுப்பினர்கள் வி. பொன்னுசாமி, ஆர். நடராஜ், எஸ்.துளசி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.