tamilnadu

பிப்.21ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம்,பிப்.19- காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.21 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற உள்ளது.   இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உரிய பதில் அளிப்பார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் பிரச்சனைகளை நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து தீர்வு பெறலாம்  என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.