districts

உணவு பொருள் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 9- திருச்சி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோக திட்ட குறை களை களையவும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையிலும் மாவட்டத்தில் உள்ள 11 தாலு காகளிலும் 11-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.  கூட்டத்திற்கு ஒவ்வொரு தாலுகாவி லும் துணை கலெக்டர் நிலையில் ஒரு  பார்வையாளரும் நியமனம் செய்யப்பட்டுள் ளனர். குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் ரேஷன் கடைகள் விவரம்: திருச்சி கிழக்கு - அரியமங்கலம் அமுதம் அங்காடி, திருச்சி மேற்கு -புத்தூர் அமராவதி, ஸ்ரீரங்கம் - அல்லித் துறை மணப்பாறை - நடுப்பட்டி,  மருங்கா புரி - அம்பாசமுத்திரம் 1, லால்குடி - பெரு வளப்பூர், மண்ணச்சநல்லூர் மாதவப்பெரு மாள் கோயில், முசிறி - மங்கலம், துறை யூர் - எரக்குடி,  தொட்டியம் - தொட்டியாப் பட்டி, திருவெறும்பூர் - அகரம் 1  சம்பந்தப் பட்ட பகுதி பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.