tamilnadu

img

குடிநீர், உணவு தேடி வரும் விலங்குகள் பலியாகும் அவலம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 24- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல  ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வனத்துறையின் காப்புக் காடுகளாக பராமரிக்கப்படும் நிலையில் அங்கு வசிக்கும் மான், மயில் போன்றவை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனத்தை விட்டு வெளியே வந்து  சமூக விரோதிகளிடமும், விபத்துக்க ளிலும், நாய்களிடமும் சிக்கி  உயிரிழக்கின்றன.  உளுந்தூர்பேட்டை வனச் சரகத்தில் 13 ஆயிரத்து 960  ஹெக்டேர் (35,000 ஏக்கர்) நிலங்கள்  உள்ளன. இவற்றில் மான், முயல்,  மயில், கரடி, காட்டெருமை, நரி உள்  ளிட்ட பல வன விலங்குகள் உள்ளன. இந்த காப்பு காடுகளில் மரக்கன்று களை உருவாக்கி மரங்களாக்கி பரா மரிக்கும் பணிகளை வனத்துறை செய்து வருகிறது. வனப் பகுதிகளில் இருக்கும் வன விலங்குகளை பாதுகாப்பது வனத் துறையின் முக்கிய பணி யாகும். வனவிலங்குகள் நீர் அருந்த எடைக்கல் 2, வரஞ்சரம் 2,  சிறுப்பாக்கம் 2, கூத்தக்குடி 2, பொரசக்  குறிச்சி 1, நகரூர் 1 என 10 இடங்களில்  சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி கள் அமைக்கப்பட்டுள்ளன.

தியாகதுருகம் அருகே வரஞ்ச ரம் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் தேடி செவ்வாயன்று (ஜூன் 23) காட்டிற்கு வெளியே வந்த மான் ஊருக்குள் இருந்த நாய்களால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்தது. அதேபோல், கல்வராயன்மலை எல்லையில் உள்ள ஆனைமடுவு பகுதியில் உணவு தேடி வந்த 5  மயில்கள் மருந்து வைத்து கொல்லப் பட்டன. வனத்திற்குள்ளேயே பல இடங்களில் தண்ணீர் தொட்டி இருந்தும் வனத் துறையினர் போதிய தண்ணீர் நிரப்பாததாலும், வனத் திற்குள்ளேயே தானிய பயிர்களை விளைவிக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உளுந்தூர்பேட்டை வனச்சரகரை தொடர்பு கொண்ட  போது, "இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்புவதாகவும், காய்ந்து கிடக்கும் தொட்டி பழுத டைந்துள்ளதாகவும், அதை சீர மைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  வனத்துறையும், அரசும் முறை யாக குடிநீர் தொட்டி உள்ளிட்ட வற்றை பராமரித்து, விலங்குகள், பறவைகள் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.