கடலூர் மாவட்டம் சிதம்ப ரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழக அரசின் ஆதிதிராவி டர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழக அளவில் இந்தத் துறையிலே பெரிய பள்ளியாக இது செயல்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சாமி சகஜானந்தா ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டும் தான் முன்னேற முடியும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அதிக பள்ளிகள் இல்லாததால் நந்தனார் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை ஆயிரகணக்கில் இருந்தது. நந்தனார் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? என்ற நிலையில் ஒருங்கிணைந்த தென்னார்காடு மாவட்டமாக இருந்தபோது பல ஆயிரம் ஏழை மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்றுள்ளனர். அப்படி கல்வி பயின்றவர்கள் தற்போது தமிக அளவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயரிய பதவிகளில் உள்ளனர். அந்த நிலையில் மாணவர்கள் தங்கி கல்விகற்க வசதியாக பள்ளி யின் அருகே விடுதி அமைத்து தரவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜ ரிடம், ஒருங்கினைந்த சிதம்பரம் எம்எல்ஏவாக இருந்த சாமி சக ஜானந்தா கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த காமராஜர் 1956-ஆம் ஆண்டு நந்தனார் ஆண்கள் பள்ளியின் அருகில் மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வசதியுடன் இரண்டு அடுக்கு மாடி விடுதி 65 அறைகளுடன் கட்டப்பட்டது. இந்த விடுதியில் கடந்த 1995-ஆம் ஆண்டு வரை 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்றுள்ளனர். விடுதியை அரசு சரியாக பராம ரிக்காததால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி யது. தற்போது 300 பேர் மட்டுமே தங்கி வருகிறார்கள். விடுதியின் கட்டிடம் மிகவும் பழுதாகியுள்ள தால் 200 பேர் மட்டுமே தங்குவ தாக கூறுகின்றனர். விடுதியின் உள்ளே மாணவர்கள் தங்கும் அறை கள், மேற்கூரையின் காரைகள் விழுந்து கம்பிகள் வெளியே தெரி கிறது. எப்போது மேற்கூரையின் காரைகள் இடிந்து விழுமோ என்ற பயமும் மாணவர்கள் மத்தியில் உள்ளது. மேலும் மாணவர்கள் தங்கும் அறைகளில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் உடைந்துள் ளது. மழைநேரங்களில் மேல்தளத் தில் உள்ள அறைகளின் மேற் கூரை வழியாக மழைநீர் உள்ளே வந்து கீழ்தளத்தின் அறையில் கசிவு ஏற் படுகிறது. எனவே இது மாணவர்கள் தங்கவே தகுதியில்லாத கட்டிட மாக உள்ளது என்று விடுதி மாண வர்கள் கூறுகிறார்கள். விடுதியின் கட்டிடம் மிகவும் பழு தான நிலையில் உள்ளது. மாண வர்களின் நலன் கருதி புதிய விடுதி கட்டிகொடுக்கவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் விடுதி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்பு கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது விடுதிகட்டிடத்தின் சில கட்டுமானப் பணிகளை மட்டும் செய்து வர்ணம் பூசி பல லட்சங்களை செலவு செய்த தாக கணக்கும் காட்டியுள்ளனர். இதேபோல் பல முறை இந்த விடுதியை சீர் செய்வதாக பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதுகுறித்து விடுதி மாணவர் ஒருவர் கூறுகையில்,“ 65 அறைகள் உள்ள விடுதியில் 20 அறைகள் தான் பயன்படுத்த முடிகிறது. அதி லும் சில அறைகளின் மேற்கூறை யின் சிமண்ட் காரை இடிந்து விழுந்துள்ளது. மீதி காரைகள் எப்போது விழுமோ என்ற பயத்தில் தினமும் தூங்கி எழுகிறோம்” என்றார். கடந்த 10 தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது எதுவுமே விடுதியில் சரியில்லை என்று விடுதி காப்பாளரை பணி நீக்கம் செய்தார். விடுதியின் கட்டிடத்தை முறையாக பராமரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவறை வசதிகள் கூட கிடையாது என்றும் வேதனையுடன் கூறினார். ஆட்சியர் ஆய்வுக்கு பிறகு ரூ. 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விடுதியில் கழிவறை வசதி செய்து கொடுத்துள்ளனர். அந்த கழி வறையின் மேல்தள சிமண்ட் காரை கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில்தான் இருக்கி றோம். எனவே அரசு உடனடியாக இந்த கட்டிடத்தை மாணவர்கள் தங்குவதற்கு லாய்கற்ற கட்டிடமாக அறிவித்து 500 பேர் மட்டும் தங்கும் அளவிற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய விடுதி கட்டிடத்தை கட்டிக் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நந்தனார் ஆண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரும், விடுதி காப்பாளர் (பொறுப்பு) குகநாதன் கூறுகையில்,“ இந்த கட்டிடம் கட்டி 62 ஆண்டுகளுக்கு மேலாகி றது. கட்டிடத்தின் பல பகுதிகள் சிதிலம் அடைந்துள்ளது. மாண வர்கள் தங்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. எனவே தற்போது அரசு சார்பில் 30 அறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும். தற்போது கல்வி பயிலும் கட்டிடத்தை தற்கா லிக விடுதியாக மாற்ற முடிவு செய்துள்ளோம்”என்றார். இதேபோல் நந்தனார் பள்ளியின் வாளகத்தில் தொடக்கபள்ளி இரண்டு தளத்துடன் இயங்கி வந்தது. அந்த கட்டிடமும் மிகவும் சேதமடைந்ததால் அருகில் ஒரு சிறிய கட்டிடத்தில் ஐந்து வகுப்பு களுக்கும் ஒரே அறையில் செயல் பட்டு வருகிறது. அந்த கட்டி டத்தை இடித்துவிட்டு புதிய கட்டி டம் கட்டவேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனை அரசு ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. கட்டிடம் தானாக இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வர்கள். மேலும் பள்ளி வளாகத்தில் தேவையற்ற கட்டிடங்கள் பல உள்ளது. அதனை இடித்து தரை மட்டமாகக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளனர். -காளிதாஸ்