tamilnadu

தனியார் பங்களிப்பில் சாராட்சியர் அலுவலகத்தில் கழிவறை, காத்திருப்பு இடம்

சிதம்பரம், மார்ச் 5- சிதம்பரம் சாராட்சியர் அலுவல கம் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம் என 4 வட்டங்களை  கொண்ட கோட்டமாகும். இந்த வட்ட  பகுதிகளில் பொதுமக்கள், மாற்றுதிறனாளி கள் என நாள் ஒன்றுக்கு 1000-க்கும் மேற் பட்டோர் மனு கொடுப்பதற்காக வந்து செல்கி றார்கள்.  இந்த அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் காத்திருக்க தனி இடம் மற்றும் கழி வறை வசதிகள் இல்லை. இதனால் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர்.  சிதம்பரம் சாராட்சியர் விசுமகாஜன் முன்  முயற்சியால், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தை  சார்ந்த நிர்வாகி முஹம்மது யாசீன், மிஸ்ரி மல் மஹாவீர் சந்த் ஜெயின் அறக்கட்டளை கமல் கிஷோர் ஜெயின், தீபக்குமார் ஆகி யோர்  பயணாளர் அமரும் நிழற்குடை, கழி வறை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்த னர். இதனைத்தொடர்ந்து சாராட்சியர் அலு வலகத்தில் பயனற்று சுகாதரமற்ற நிலையில்  இருந்த பயணாளர் நிழற்குடை மற்றும் கழி வறையை ரூ.1.30 லட்சம் செலவில் நவீன வசதி களுடன் சரி செய்யும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. இதனை மக்கள் பயன் பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி விரை வில் நடைபெற உள்ளது.