பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைந்த கவிஞர் மன்னர்மன்னனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் இரங்கல் கூட்டம் துணைத் தலைவர் பேராசிரியர் ராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பால்கி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.அமர்நாத், முற்போக்கு எழுத்தாளர் சங்க நகரத் தலைவர் முனைவர் பிரவீன், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆளவந்தார், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், வாலிபர் சங்க நகரச் செயலாளர் தமிழ்மணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.