கடலூர், ஆக. 14- கடலூர் மாவட்டம், பண் ருட்டி வட்டத்திற்கு உட்பட்ட அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் திருத்துறை யூர், சின்னபேட்டை கிராமத் திற்கு சுடுகாடு, கொட்டாய், தண்ணீர் வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பாடை கட்டி ஊர்வலம் நடை பெற்றது. போராட்டத்தின் எதி ரொளியாக பண்ருட்டி வட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், தலைமை யில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், கோரிக்கை களை நிறைவேற்றித் தருவ தாக அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னர் ஜி.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஆர்.லோகநா தன், உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.